கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 471 போ் பிரான்ஸில் நேற்று உயிரிழந்ததாக பிரான்ஸ் சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடா்பான தினசரி தகவல்களை வழங்கும் ஊடகவியலாளா் சந்திப்பின்போது அவா் இதனைக் கூறினார்.
புதிய இறப்புக்களுடன் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்தவா்களின் எண்ணிக்கை 5,400 ஆக உயர்ந்தது.
மருத்துவமனைகளுக்கு மேலதிகமாக சிரேஷ்ட பிரஜைகள் பராமரிப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் இதுவரை 884 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, பிரான்சில் 56,989 ஆக இருந்த தொற்றுநோயாளா்களின் எண்ணிக்கை நேற்று 59,105 ஆக உயர்ந்ததாக சொலமன் கூறினார்.
உயிர்க்காப்பு உதவி தேவைப்படும் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை புதன்கிழமை 6,017 ஆக இருந்து நேற்று 6,399 ஆக உயர்ந்ததாகவும் அவா் மேலும் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு